Recent Posts

சிவசித்தன்

திருமந்திரம்

Wednesday, March 23, 2011

திருமந்திரம் 725


உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.

எவ்வளவு அழகாக, அழுத்தமாக, ஆணித்தரமாக இங்கு சித்தர் நெறி பேசப்படுகிறது. அதுவும் திருமுலர் பிரானால்.

மாந்தர்களே! உங்களைப் போல் நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான். இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.

உடலே கோயில்! உள்ளுறையும் சீவனே சிவன்! என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் உடலை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கத் தொடங்கி விட்டேன் என்று உற்சாகத்தோடு கூறுகிறார்.

0 comments:

Post a Comment